Wednesday, July 25

விதிவிலக்கு!



முடிந்து போன இரவுகளில் - வடிந்து
முடிந்த மழையதுவும், இலைகளிலும்,
மலர்களிலுமாய் சிறு, சிறு துளிகளாய்
சிரித்திட, சினுங்கிடும் குருவிகளோடு,
கொஞ்சி விளையாடும் சித்தெரும்புகள்,
மரணத்தை மறந்த மகாத்மாக்களாய்
மாண்டுமடிய, காலையுணவை கழித்து,
கரைந்த உணவும் கலக்க, கழியத் தேடிய
கழிவறைகளாய் மகான்களின் சிலைகளும்
எழிலிழந்து, காத்துவாங்கி கொண்டிருக்கும்
தெருக்களாய் கடற்க்கரை சாலைகளும்,
முக்கிய சந்திப்பு வளையங்களும்.

இயற்கையின் விதி, தலைவர்களுக்கு - மட்டும்
என்ன விதிவிலக்கா?



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: