Tuesday, July 17

இன்பமும் அவளும்!


இரவும் நிலவும்,
இன்பமும் அவளும்,
இரண்டுமே பிரிவது,
பகலவன் வரவிலோ,
வெறுக்கிறேன், நடிக்கிறேன்,
வேட்கையில் தவிக்கிறேன்,
வியர்வையும் காய்வதற்குள் - மின்
விசிறி நிறுத்திவிட்டு,
திரைசீலை விலக்கிவிட்டு,
அறைக்கதவை திறந்துக்கொண்டு ,
நழுவி, விலகி செல்ல முனைந்தாளே,

முத்த சத்தம் எல்லாம்,
முழுதாய் முடியவில்லை,
முழுக்க, முழுக்க முயன்று
மூச்சு திணறவில்லை,
எச்சில் பஞ்சம் நாவில்
விக்கல் நிக்கவில்லை,
விடியல் யாரைக்கேட்டு,
விரசாய் வந்ததுயின்று,
தினுசாய் கற்ற கலையை,
செய்முறை விளக்கம் காண,
ஏனோ வேண்டாம் என்றாள்,
பாவம் அவளும் தானே,
பச்சை உடம்புக்காரி வேறு,
பதுசாய் தொங்க முடியாதே,
பதினைந்து மாத கட்டுப்பாடு,
கட்டவிழ்க்க இன்னும் தாமதம் ஏனோ?

பச்சை குழந்தையாய் அழவ்வைத்தாள்,
பஞ்சமி இரவும், விடியலை தொட்டதே!


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: