Friday, July 27

நடுநிசி துரத்தல்கள்!



ஆழக்கடல் நடுவில் ஆடியப்படி,
ஒற்றை பாய்மரப்படகு - துடுப்புகள்
அதன் ஆட்டத்தை கட்டுப்படுத்த,
ஆடியப்படகும் சமநிலையில், சாந்தமாய்,
போன உயிர் திரும்பியதோ அதிலிருந்த
எனக்கும், ஏரியில் கூட நீந்திடா நானும்
நடுக்கடலில், யாரும் தெரியா இருட்டில்,
யாருமற்று தத்தளிக்கிறேன் - பயம்
கவ்விய இதயத்துடன் பதறியே,
வீர்ரென கத்தி, அலறுகிறேன்,
காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று!
அப்பொழுதுதான்,
ஒருக்குரல் பக்கத்திலிருந்து என்னிடம்,

என்ன கனவா? போ, போய் விபூதி எடுத்து
பூசிக்கொண்டு படு எல்லாம் போய்விடுமென்று.


நடுநிசி துரத்தல்கள்!


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: