கண்களும் பொய் சொல்லுமாம்
கேட்டிருக்கிறேன், பார்த்ததில்லை
கருவிழி, அதன்வழி, புகும்வழி
அதனுள் ஊடுருவி ப்பார்க்கிறேன்,
உற்றுப்பார்க்கிறேன், புன்னகையுடன்
திரும்பி நடக்கிறேன்,
கண்களுக்குள் கவிதை,
உவமைகளும், சிலேடைகளும்,
எதுகைகளும், மோனைகளும்
இலக்கண, இலக்கிய மொத்தமமும்,
அவள் கண்களில் பொய்களாய்,
அகம் அமர்ந்திருந்ததே, ஆச்சர்யம்,
மணக்கும் தமிழ், மயக்கியதென்னை,
அவள் விழிகளில் அது சொல்லும் பொய்களில்.
- எழுத்தோலை கோ.இராம்குமார் -
Photo Courtesy: Falcon Designers!
No comments:
Post a Comment