Tuesday, July 17

கோலம்!



முறைவாசல் நாளில்,
கோலம்போட நீ வருவாய்,
கோவில் போக நான் கடப்பேன்,
இரண்டுமே நடந்தது இந்நாளிலோ,
புள்ளிகள் வைத்து எண்ணியப்பொழுது,
புருவம் வளைந்து வில்லாய் போவதேன்,

வைத்த எண்ணிக்கை குறைந்ததோ,
வளைய, நுழைய தேடிய புள்ளியும்,
நீ வைக்க முனைந்த தருணம் தானோ,
உன்வாசல் கடக்க நடந்தேன் நானே,
என்னை பார்த்த நொடிகளில் நீயும் - வைக்க
மறந்தது புள்ளியோ என்னவோ - என்
இதயம் தொலைந்தே அங்கேயே!



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: