Wednesday, July 18

போறாளே, போறாளே.....!


கோவை சாலையில், கோதை ஒருத்தி

கோவைப்பழ இதற் முனுமுனுக்க
என்னிடம் ஏதோ, சொல்லி போறாளே
போறாளே, போறாளே நெஞ்சை திருடி
போறாளே...., நேசம் வைத்து போறாளே...


நேரம் திருடி சேர்த்துவைத்து,
மணி கணக்காய் காக்க வைத்து,
மனசை கிள்ளி, அள்ளிக்கொண்டு,
மதியம் நேரம் வரப்பின்னோரம்,
வரச்சொல்லி சைகை காட்டி - போறாளே,
போறாளே போறாளே பூவாய் சிரித்தவள்
போறாளே ...., முல்லை பூ சூடி போறாளே...

எதோ நடக்குது உள்ளுக்குள்ள,
ஓட்டபந்தயம் முடியவில்ல,
ஒன்றா, இரண்டா அவள சொல்ல,
ஒருநாள் போதாது சொல்ல, சொல்ல,
உள்ளுக்குள் உறைந்த நெய்யைப்போல,
உருகாமல் நிற்கிறாளே பருவ முல்ல,
ஒரு முறை மட்டுமே பார்த்தேனே அவள,
இன்னொரு முறை பார்க்க போறேனே,
போறேனே போறேனே, இன்று அவளைப்பார்க்க
போறேனே....... மைதிலி மைவிழி வழி போறேனே...


- எழுத்தோலை  கோ.இராம்குமார்-


Photo  courtesy: Negis Art!

No comments: