Tuesday, July 17

களிப்பு !

 
ஈன்ரப் பொழுதில் கண்ணீர்மல்க,
கை விரித்து அணைத்தேன் - கண்ணே
உன்னை மகனாக பெற்றேனே அந்நாள்,
மறுப்பிறப்பில் கிடைத்த வரமோ நீயும்,
முதல் வார்த்தையாய் அம்மா என்றதும்,
வாரியணைத்தேன், வயதொன்று தொட்டதும்,
மண்டியிட்டு நடந்த நீ, நொண்டியடித்து,
முதலடி வைத்தாய், கண்கொட்டி பார்த்திருந்தேன்,
ராகவா என்று ராகமாய் பாடியழைத்தேன்,
பார்த்திருந்தேன், ஒருக்கைப்பிடித்து,
உன்னுடன் சேர்ந்து நடந்தேன், வயதொன்று
கடந்து, இரண்டு வயதை நீ யடைந்து,
இன்று பள்ளியும் சேர்ந்துவிட்டாய்,
பாருலகை ஆளவே, பண்பாளனாய்,
பலப்பட்டம் பெற்று, நாட்டிற்கும்,
வீட்டிற்கும் நன்ப்பேரு சேர்த்திடவே,
வாழ்த்திடும் அன்னையாய், அரவணைக்கிறேன்,
என் வம்சம், உன்னால் எழுத்தலைமுறைக்கும்,
தொடரும் என்னும் களிப்பில்.

- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: