Tuesday, July 17

கும்மாளம்!


அலைமோதும் கூட்டம் கண்டு,
அணைப்போட்டு, விட்டனர் உள்ளே,
அபிசேகம், ஆராதனை, அர்ச்சனைகள்,
ஐம்பதடி உன்னுருவ படத்திற்கு,
அதேவுயர பூமாலை அசத்தலாய் அரங்கேற,
ஆட்டம், பாட்டம், கும்மாளம்.

ஆயிரமாயிரம் இதயங்கள் மத்தியில்,
நீ கடவுளா, இல்லை அவனுக்கும் மேலா,
எத்தனை உற்சாகம், அத்தனை சந்தோசம்,
உன்பெயர் கேட்டால் உள்ளுக்குள்,
ஏனோ சரவெடி வெடிக்குதே.

ஆசை நாயகன் நீ அமர்க்களமாய்,
எங்கள் அசைவை செதுக்கிவிட்டாய்,
யார் என்ன சொன்னாலென்ன,
எவர் என்ன பேசினாலென்ன,
உயிர் இருப்பது உண்மையானால்,
அதிலே துடிப்பது உன் பெயராய் இருக்கும்.

தங்கத்தில் உன்னுருவம்,
தீட்ட செய்து மாட்டி அலைவோம்,
சிங்க தலை கொண்ட எங்கள் தலைவனே,
செல்லமாய் உன்னை "தல" என்றோமே!


தல போல வருமா!


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: