Thursday, July 26

ஸ்ருதி!


சிரிப்பும், அழுகையும் மட்டுமே,
அன்றாட வாழக்கையாய்,
சுற்றித்திரிந்த பட்டாம்பூச்சி,
சிறகை முழுதாய் இன்னும்
விரிக்கவேயில்லை, அதற்குள்
தேவதையாய் சொர்க்கம் சேர்ந்து,
சோகத்திலே நம்மையெல்லாம்,
தேங்க வைத்து, தேம்பி, தேம்பி
அழவைத்து, நிஜமாய் சிரித்த நீ (ஸ்ருதி)
இன்று நிழற்ப்படத்தில் சிரிக்கிறாய்,

நியாயம் கேட்க ஒரு மணியில்லையே?
மனுநீதி ஆட்சியையும் நடக்கவில்லையே?
யாரிடம் சொல்வது, எப்படி சொல்வது,
பசுவாய் துடிக்கும் பெற்றோர் கண்ணீர்,
துடைக்க நமது கைகள், கோர்ப்பதை தவிர,
உன் ஆன்மா, சொர்கத்தில் சாந்தியடைய.







- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: