Saturday, July 21

எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே....




மனமே மயக்கும் மனமே உந்தன்,
மணமே என்னுள் மணக்க நானும் மிதக்கிறேன்,
தயங்கி, கிறங்கும், குழப்பம் அதனால்,
இருக்கும் இடமறந்து, இதய யறைப்புகுந்து,
இயக்கம் இடிமுழக்கம் ப்போல் துடிதுடித்தே கேட்க்குதே,
உன்ப்பெயர் சொல்வேனோ? என்னுயிர் காணலையே,
ஏனோ என்நெஞ்சில் ஏதேதோ சத்தம் கேட்கிறதே...

எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே,
எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே,
எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே...

எனக்காய் பிறந்தவள் நீயே, செந்தாழம்பூவே,
சிவப்பு செம்பருத்தி ஒற்றையிதழ் சிரிப்பினில் 
சிறகடிக்க செய்தாய் என்னை, சிட்டுக்குருவியும் ஆனேன்,
அலைப்பேசி கோபுர கதிர்ப்போல் உன்ப்பார்வை கொல்ல,
அழிந்துவருகிறது என்மனம் வந்தென்னை காப்பாயோ ஆருயிரே?
அழிவிலிருந்து என்னை மீட்ப்பாயோ? மீளாதுயல்கிறேன், மின்மினியே?

எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே,
எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே,
எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே...

இத்தனை நாள் காதலித்தோம், இரவுப்பகல் பார்த்ததில்லை 
இரண்டு நொடி உனைபிரிந்தேன் இரவதுவும் நீள்கிறதே,
இங்கிருந்த உன்னிதயம், பத்திரமே, ரத்தினமே,
பக்குவமாய் உன்னை சேர்ந்திடவே, பார்த்து பூத்து இருக்கிறேனே,
இசைத்தமிழ் உன் மொழியில் இசைந்து ஒற்றை வார்த்தை சொல்லு,
தாலி ஒன்று கட்டிக்கொள்ள நல்ல, நாள்க்கிழமை, நேரம் ஒன்று,
வாசுகியாய் உனை கொண்டாடியே, வள்ளுவனாய் வாழ்ந்திடவேன்,

எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே,
எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே,
எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே...

மனமே மயக்கும் மனமே உந்தன்,
மணமே என்னுள் மணக்க நானும் மிதக்கிறேன்,
தயங்கி, கிறங்கும், குழப்பம் அதனால்,
இருக்கும் இடமறந்து, இதய யறைப்புகுந்து,
இயக்கம் இடிமுழக்கம் ப்போல் துடிதுடித்தே கேட்க்குதே,
உன்ப்பெயர் சொல்வேனோ? என்னுயிர் காணலையே,
ஏனோ என்நெஞ்சில் ஏதேதோ சத்தம் கேட்கிறதே...

எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே,
எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே,
எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே,
எல்லாம் உன்னாலே பெண்ணே, என்னுயிர் காணலையே.....


- எழுத்தோலை கோ.இராம்குமார்-
 
Photo Courtesy: Falcon Designers!

No comments: