Sunday, April 28

தாட்சாயணி உன் பேரன்பை!

Feb`25

கையளவு இதயத்தினுள்
கூட்டி வைத்த காதலையெல்லாம்
பொத்தி வைக்க மறப்பேனோ, 
சொக்கி உன்னை இழப்பேனோ, 
மக்கும் இலையும் ஆவேனோ,
நித்தம், நித்தம் இறப்பேனோ,
நீந்தும் மீனாய் நானும்
அழுவது தெரியா அழுவேனோ,

மௌனமாய் ஒளிரும் மதியும்
உன்னிடம் கேட்டே உலவுமோ,
ஒரு வரம் அதன் இரவினில் கேட்கிறேன்
வருவாயோ ஒரு சொல் உதிர்ப்பாயோ,
ஓயாமல் உன்னை தொடரும் நாயாக
வாலாட்டி கேட்கிறேன் வாயின்றி,
தாராயோ, தாராயோ உன் அன்பை
தவமிருந்தும் கிடைத்திடா,

தாட்சாயணி உன் பேரன்பை.


எழுத்தோலை!

No comments: