Sunday, April 28

எழிலி!

Mar`16

எழிலி திரண்டு,
இடைவிடா உருண்டு, 
என்னிடம் சேர்த்ததே 
பொழியும் மழையை - அதுவும் 
என் சிரமதனை நனைக்க,
பரவும் குளிர் ஊடே 
யாரோ புகுத்தியது - உன்
உருவை, இறந்தேன்
அக்கணமே நானும்,
உன் திருவாய் ஒரு
மொழி சொல்லிடை என்
செவி புக மீண்டும்
பிழைத்தேன் உயிர் - அதுவும்,
உன்னால் உந்தன் பின்னால்
நிழலாய் தொடர்கிறதே,
இருளினுள் நுழையாதே கண்ணே,
வாழ்ந்திட ஆசை
கொல்லாதே, வேண்டும்
இவ்வாழ்வும், அதுவும் உன்னோடு
மட்டும் இருந்திட வேண்டுமே,

வெண்ணிலவே என் பெண்ணிலவே.

( எழிலி = மேகம் )

எழுத்தோலை!

No comments: