Sunday, April 28

புது வாழ்வை!

Mar`20

என்றாவது ஒரு நாள்
நீ என்னிடம் வருவாய் என்றே,
நுனிப்புல் மீதுள்ள 
பனித்துளிகளை சேகரிக்கிறேன்,
அம்மன் சிலை அபிசேகம் செய்து 
வேண்டிக்கொள்கிறேன்,

ஆண்டாள் பாக்கள் தழுவி
தினம் ஒரு பாடல் வடிக்கிறேன்,
ஆழக்கடல் மூழ்கி, தேடித்தேடி
முத்துக்களை சேர்க்கிறேன்,
சொத்தாம் நீ எனக்கு என்றும்
அழியாதிருக்க,
இதயக்கூட்டில் பொக்கிசமாய்
பாதுக்காக்கிறேன்.

வந்துவிடு தமிழ் மகளே,
தரணியெங்கும் சென்றிடலாம்,
தனித்தீவை தேடித் பிடித்து,
புது வாழ்வைத் தொடங்கிடலாம்.

எழுத்தோலை!

No comments: