Sunday, April 28

பொன்விழா இரவோ?

Mar`05

பத்திரப்பதிவு செய்ததைப்போல் 
முத்திரைப் பதித்த உன்னிதழை, 
நித்திரை மீண்டும் கேட்கிறது
சத்தமாய் வேண்டுமாம் இன்னொருமுறை,

உத்தரவு ஒன்று இடு கன்னல், 
சுற்றளவு அளந்திட என் இதழால், 
கற்றதை எல்லாம் தொடங்கிட உன்னால் 
மார்கழியும், சித்திரையாய் மாறிடுமே தன்னால்,

இத்தகையான,
முன் விளையாட்டு சேட்டைகள்,
முகம் மறைக்கும் வெட்கங்கள்,
முதல் இரவின் தயக்கங்கள் எல்லாம்
மறந்திட்ட இது - நமக்கு
பொன்விழா இரவோ?

எழுத்தோலை!

No comments: