Sunday, April 28

வழி சொல்லடி!

Feb`25

வளைவு, நெளிவு மிகுந்த
மலை வழிச் சாலையில்
மாட்டு வண்டிக்குப் பின்
முந்த முனையும் பேருந்தாய்

நானும்,

முந்துவதும், பிந்துவதுமாய்
உன் நினைவுகளை ஏந்தி,
காதலில் முன்னேற வழிக்கிடைக்கா
எத்தி, எத்தி நடக்கிறேன்,

தத்தி, தத்தி போறவளே
எனது குரல் கேட்கலையோ?
சிக்கி, சிக்கி சிதைந்ததுப் போதும்,
சீக்கிரம் ஒரு வழி சொல்லடி.

எழுத்தோலை!

No comments: