Sunday, April 28

நீந்திடும் மீனுக்காய்!

Feb`20

சொட்டும் நீரும் 
குளமாய் சேரும்,
மீன்கள் நீந்தும், 
தவளைகள் துழாவும்,
கொசுக்கள் மிதக்கும்,
நாய்கள் நீரருந்தும்,

நான் கரை ஓரத்தில் 
ஒரு நீண்ட கோலுடன் - அதன் 
முனையில் கட்டிய நூலுடன்,
கொக்கியில் புழுவை பலிக்கொடுத்து
தவமிருக்கிறேன்,

சொட்டிய நீராய் அவள்,
சொட்டு, சொட்டாய் என்னிதய
குளமதில் சேர்ந்தாள் - மீன்களாய்
காதல் நீந்திடவே,
நானோ
நீந்திடும் மீனுக்காய்.

எழுத்தோலை!

No comments: