Sunday, April 28

என்னவாகுமோ!

Mar`05

முழுமதி இரவில் 
நீயின்றி நடந்தேன் பெண்ணே 
நிஜமாய் என்னுடன் நீயும் 
வருவதாய் எண்ணி,

அழகாய் உலவிய நிலவும் 
முகில்களின் ஊடே மெதுவாய் 
நுழைந்து, மறைந்து பார்க்கிறதே 
வெட்கத்தில் சுற்றத்தை மறந்து,

நிஜமாய் உன்னைக் கண்டால்
என்னவாகுமோ அவ் வெண்ணிலவும்?

எழுத்தோலை!

No comments: