Friday, September 13

தீயோடு சேர்ந்து நானும் ..


ஜூன் ` 08

உனக்காக எழுதிய கவிதைகளை எல்லாம் 
தீக்கு இரையாக்கிவிட்டேன்,
உயிரற்ற பிணத்தை எத்தனை நாள் நானும் 
பார்த்தப்படி அழுது வடிப்பேன் என்றே,
அத்துனை துயரங்களை ஏந்திய நொடியிலும் 
பித்தனைப் போன்றே சுற்றியலைந்ததுப் 
போதும் இன்றே ,

உனக்காக எழுதிய கவிதைகளை எல்லாம் 
தீக்கு இரையாக்கிவிட்டேன்,
தீயோடு சேர்ந்து நானும் எரியும் புகையால்,
கண்களில் கண்ணீரை அவிழ்த்துவிட்டேன்.

எழுத்தோலை!

No comments: