Friday, September 13

நறுமணமா, நய வஞ்சகமா ??

ஜூன்` 12

உன் கூந்தல் ஏறி உதிர்ந்த பூக்கள் யாவும் 
அதன் நறுமணம் வாடா சிரித்திருக்கும்,
உன் கூந்தலுக்குள் நுழைந்த நானும் - திக்கு 
தெரியா தவிக்கிறேன் நாளும் - நறுமணமா,
நய வஞ்சகமா - நாயாகரா நீர் வீழ்ச்சியாய்
வீழ்த்திவிட்டு விரிந்து பறக்குதடி,

"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி"
குறுந்தொகைப் பாடலாய் - என்னையும் 
பாடிட தூண்டுதடி - உண்மையை
நீயே சொல்லிவிடு,
இயற்கை, செயற்கை இரண்டையும்
கலந்து யார் பூசியது உன்க்கூன்தலில்?

என்னையும் மயக்கி, மங்கிய மந்தியாய்
மரத்திற்கு மரம் தாவ செய்யுதடி,
மாயவலை உன் கூந்தலும் - அதில்
கமழும் மலர்முக நறுமணமும்.

எழுத்தோலை!

புகைப்படம்: ND Asmitha, Actress

No comments: