Friday, September 13

அன்மையில் பொழிந்த மழையில்....


ஜூன்` 15



அன்மையில்
பொழிந்த மழையில்
நனைந்த நூல் இழையில்
தெரிந்த இரு(ள்) உலகில்
மறைந்திருந்த அழகில்,
பித்தம் கொண்டேன் பெண்ணே,

பெண்மை செறிந்த நிறைவில்
உண்மை எல்லாம் காணவே 
அர்த்தம் இன்றி நகைக்கிறேன்,
ஆனந்தத் தாண்டவம் எடுக்கிறேன்
அள்ளிக் கொண்டாடி - மகிழத்
துடிக்கிறேன்,

கள்ளி கனவில் நுழைந்தாலே
கிள்ளி, கிள்ளிப் போவாளோ,
வெள்ளி முளைத்த வானைப்போல்
நான் மின்னி, மின்னி சாகிறேன்
மயங்கி மண்ணில் விழுகிறேன்,
தூங்கி, தூங்கா நடக்கிறேன்,

நடைமுறை கானா சாத்தியமாய்
சத்தியமாய் நான் நானாக இல்லை,
என்னையும் கடந்தே மிதக்கிறேன்,
காற்றாடிப் போலவே,
ஊர்க் கண்களை விட்டு மறைந்தே
பறக்கிறேன்.

எழுத்தோலை!

No comments: