Friday, September 13

மோகமூட்டம் கூடட்டும் நம் உருவினில்...


ஆகஸ்ட்` 10

தூரயிருந்து சிரித்துவிட்டு 
நகரும் நீயும், 
விண்மீனோ இல்லை பெண்மீனோ,
நில்லடி என் பெண்ணடி நீயடி
நிறைமதி குளிர்தரும் இதமடி- இதயம் 
அதுவும் துடிக்கும் சத்தம் கேளடி,

உன் மலர்முகம் அதுவும் வேண்டும் 
என் அருகினில், என் மடியினில்,
விடியும் வரை ஒளிரும்
நொடிகள் நீளும்,
மீண்டும் இருளும் - அது
வரை மோகமூட்டம் கூடட்டும்
நம் உருவினில்.

எழுத்தோலை!

No comments: