Friday, September 13

நிழல்களை, நிஜங்களாய் செய்பவன் நீ !


ஆகஸ்ட்` 16

வாருங்கள் வாழ்த்துவோம்,
" எனது சிறந்த நண்பரும், மிகச்சிறந்த புகைப்பட கலைஞரும், கவிஞருமாகிய திரு கௌரி ஷங்கர் அவர்களின் பிறந்த நாளில் இன்று"

நிழல்களை, நிஜங்களாய் செய்பவன் நீ 
அழுதிடும் மலர்கள் கூட சிரித்திடும் - நீ 
பிடித்திடும் புகைப்படத்தினில் தினம் எல்லாம்,
நிழல்களை, நிஜங்களாய் செய்பவன் நீ 
நெருங்கிட முடியாத பனித்துளிக் கூட 
உன் கலைநுனுக்கத்தில் ஓவியம் தான்,
நேர்கான முடியாத சூரியனையும் நீ
சுட்ட வடு ஆறாமல் அழகாய் அலங்கரிக்கும்
நாளேடுகளிலும், முகநூலிலும்,
நிழல்களை, நிஜங்களாய் செய்பவன் நீ
என் நண்பனாய் கிடைத்ததில் தான்
எனக்கெத்தனை பெருமை,
வாழியவே நீ பல்லாண்டு,
இன்றுப் போல் என்றும், என்றென்றும்,

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்,
என்னினிய தோழா "கௌரி ஷங்கர்".

எழுத்தோலை!

https://www.facebook.com/pages/Gowris-Photography/228720603897496

No comments: