Friday, September 13

மராம மராம மராம மராம ..


ஜூலை` 23

மராம மராம மராம மராம 
---------------------------------------

மராம மராம என்று சொல்ல 
ராம ராம நாமம் முந்தும், 
மரம் மரம் என்று சொல்ல 
அறம், நலம் நம்மில் மிஞ்சும்,
மராம் மரம் இரண்டும் வேண்டி 
தவம், தவம் புரிதல் நன்றோ,
மராம் மரம் இரண்டும் வேண்டி
தவம், தவம் புரிதல் நன்றோ,

விதை திணித்து, முளையிட செய்து
நீரிரைத்து நீ காக்க - வீசிடும்
தென்றலும் சுவாசமாவது நன்றோ,
மலர் இறைக்கும், மழை பொழியும்
காய்கள் கிடைக்கும், கனிகள் கொடுக்கும்,
நிழலும் நீட்டி நிம்மதி உறக்கம் தழுவும்,
இத்தனையும் கொடுக்கும் மரத்தை
வளர்த்தல், பேணல் நன்றோ,
இத்தனையும் கொடுக்கும் மரத்தை
வளர்த்தல், பேணல் நன்றோ,

மனிதா உனக்கு இருதயமும் இருந்தால்
மரத்தை அறுக்கா அரமாய் மாறு,
மாறும் உலகில் மாறாது அதன் உறவு
என்பதை மட்டும் உணர்ந்தால் போதும்,
மரம் தலைக்கும், உயிர்வளி பெருக்கும்
நாளை தலைமுறையும் வளமுடன் இருக்கும்,
மனிதா உனக்கு இருதயமும் இருந்தால்
மரத்தை அறுக்கா அரமாய் மாறு,
மாறும் உலகில் மாறாது அதன் உறவு
என்பதை மட்டும் உணர்ந்தால் போதும்,
மரம் தலைக்கும், உயிர்வளி பெருக்கும்
நாளை தலைமுறையும் வளமுடன் இருக்கும்,

மரம் காப்போம், மழைப் பெறுவோம்,
மரம் வளர்ப்போம், வளமுடன் வாழ்வோம்.

#எழுத்தோலை!

No comments: