Friday, September 13

தலைவா: வரமா, சாபமா ?


ஆகஸ்ட்` 16



கண்டெடுத்த முத்தென 
உனை நம்பி வந்தவனுக்கு 
துண்டெடுத்து அவன் 
தலையில் போட்டதேன்,
கண்டெடுத்த முத்தென 
உனை நம்பி வந்தவனுக்கு 
துண்டெட்து அவன் 
தலையில் போட்டதேன்,

சிலக் கோடியில் படமெடுத்து
சில்லறை வியாபாரம்
செய்தவன் சிறந்தான்,
சிறு முதலீட்டு படமெல்லாம்
சிரிக்கவும் வைத்து,
சிந்திக்கவும் வைத்து
தயாரித்தவனுக்கு
லாபமும் தந்திட,

கோடியில் ஊதியம் கேட்டு,
பலக்கோடி செலவுகள் குடித்து,
சுயநலம் உன்னரசியல்
நாடகம் நடத்த,
சிக்கினவன் ஓர் அடிமை
சந்திர பிரகாசம் தானோ,

அரசியல் ஆசைகளும் எழும்,
அடம்பர நிழல் உலகில் நீயும்
ஜொலிக்க,
அரை வேக்காட்டு கூட்டம்
நம்பி
அடித்தளம் அமைத்திட
இயலுமோ,

அதிகார குரலும் இல்லை,
அரவணைக்கும் இதயம் இல்லை,
ஆதரவாய் யாருக்கும் இல்லை,
அப்புறம் எதற்கு உனக்கிந்த
ஆசை,

ஊர்விட்டு ஊர்வந்து
உண்ணக் கூட உணவின்றி,
இருக்கவும், உறங்கவும்
தெருக்களில் புலங்கிடும்,
எத்தனை, எத்தனை
திறன்மிகு இயக்குனர்கள்,
நாலைந்து கதை இயற்றி
நாசுக்காய் படம் எடுக்க
ஆறேழு வருடங்களாய்
ஆதரிக்க யாருமின்றி
சாலிகிராமத்திலும்,
வடப் பழனியிலும்,
கோடம்பாக்க தெருக்களிலும்
நிறைந்து, சிறுத்து
துடித்து திரிகின்றனர்,

நீ கேட்கும் ஊதியத்தில்
இவர்களில் ஐந்துப்பேர்
படமெடுத்து முடிப்பர்,
நீ கேட்கும் ஊதியத்தில்
இவர்களால் ஐந்தாறு
சிறந்த படங்களும் வெளிவரும்,
நீ கேட்கும் ஊதியத்தில்
ஐநூறு குடும்பத்தில்
அடுப்பெரியும்,

கிடைத்த வாய்ப்பினை
சிறந்த படைப்பினை
கொடுத்திட முடியாவிடினும்,
உன்னை நம்பி
முதல் போட்டவன் பணத்தினில்
உன்னரசியல் நாடகத்தை
இயற்றிடாதிருந்தால்ப் போதும்,
பாவம்
அவனும், அவன் குடும்பமும்,
எஞ்சியதைக் கொண்டு
பிச்சை எடுத்தேனும்
பிழைத்துக் கொள்வர்.

எழுத்தோலை!

No comments: