Friday, September 13

வருவாயா மத்த சுகம் தருவாயா?


ஆகஸ்ட்` 08

வெட்கப்பட நானும் பெண்ணில்லையே - இருந்தும் 
எப்படி சிவந்தன என் கன்னங்கள்,
கள்ளி, நீயும் என்னடி மாயம் செய்தாய் 
மிச்ச இடம் ஏதுமின்றி 
மொத்தமுகம் முழுதும் உன்னிதழ்ப் பதித்து 
சத்தமே இல்லாமல் சென்றுவிட்டாய்,

விடிந்துதான் தெரிந்துக்கொண்டேன் 
சிவந்தது என் கன்னங்கள் மட்டுமல்ல 
உன்னிதழ்களும் சேர்ந்தே என்று - இன்றும்
வருவாயா மத்த சுகம் தருவாயா?

கனவில் வருபவள் நீயென்பதால் - உன்
வருகைக்காய் காத்திருப்பதில் தவறில்லையே??
இன்றும்,
வருவாயா மத்த சுகம் தருவாயா???

எழுத்தோலை!

No comments: