Friday, September 13

நதியே, நிம்மதி உறக்கம் கொண்டாயோ....?


ஜூன்` 09

இனிமை சொல்லும் இரவு நேரம் 
நதியே, நிம்மதி உறக்கம் கொண்டாயோ,
குன்றிலிருந்து குதித்து தாவி - மண்ணில்
விழுந்து தவழ்ந்த களைப்பா?
காடு, மலை மேடுகள் எல்லாம் 
கடந்தோடி, பாடி வந்த களைப்பா?
இத்தனை சீக்கிரம் நீயும் உறங்கிப் போகவே 
இன்னும் எத்தனை, எத்தனை காரணங்களோ,

இனிமை சொல்லும் இரவு நேரம்
நதியே, நிம்மதி உறக்கம் கொண்டாயோ.

எழுத்தோலை!

No comments: