Friday, September 13

ராஜனுக்கு ராஜன் நீயே ரங்கராஜனே !


ஜூலை` 18

ராஜனுக்கு ராஜன் நீயே ரங்கராஜனே 
கவியன்னையின் உயிர்ப்பிள்ளை வாலிராஜானே,
வாயிருந்தும் வார்த்தை இல்லை என்னிடத்திலே 
அழுத்த நெஞ்சம் சிவந்ததிங்க, வலிகள் மிச்சமே,

இனம் புரியாதொரு சோகம் 
பற்றிப் பரவுது என் நெஞ்சம் எங்கும்,
ஐயா, கவிஞரே, ரங்க ராஜரே 
எங்கும் கேட்கும் உங்கள் பாட்டும் 
அதன் பொருளும், கவிநயமும் - இனி
எங்கு கேட்ப்பேன் நானும் புதிதாய்,

புதிதாய் பிறக்கும் ஒவ்வொரு வரியும்
வாலியுங்கள் பெயரை பின்பற்றி நிற்குமே,
எவர்க்குவுண்டு உங்கள் சொல்நயம்,
எவர்க்குவுண்டு உங்கள் நாணயம்,
ஓர் வரியில் இருப்பொருள் உவமை
நீரின்றி, இனியெங்கு கிடைக்கும் சுவையாய்,

ராஜனுக்கு ராஜன் நீயே ரங்கராஜனே
கவியன்னையின் உயிர்ப்பிள்ளை வாலிராஜானே,
வாயிருந்தும் வார்த்தை இல்லை என்னிடத்திலே
அழுத்த நெஞ்சம் சிவந்ததிங்க, வலிகள் மிச்சமே,

சொர்க்கத்தின் வசம் நீங்கள் - வாசம்
செய்திட சென்றாலும், உங்கள் வசம்
எந்தன் ஜீவன் என்றுமே,
வாழ்த்துங்கள் அங்கிருந்தே என்னை
என் வரிகளில் உங்களை சுமப்பேன்
என்றும்,

ராஜனுக்கு ராஜன் நீயே ரங்கராஜனே
கவியன்னையின் உயிர்ப்பிள்ளை வாலிராஜானே,
வாயிருந்தும் வார்த்தை இல்லை என்னிடத்திலே
அழுத்த நெஞ்சம் சிவந்ததிங்க, வலிகள் மிச்சமே.


கண்ணீரில் #எழுத்தோலை!

No comments: