Friday, September 13

தவறி விழுந்தப்படி..


ஜூலை` 14

குழலூதி உன் குழல் சேர முனையும் 
என் விரல்களும், என் இதழ்களும் 
உன் குரலதனில் புதைந்தே - தப்பி 
மிதந்து, தவறி மீண்டும் விழுந்ததடி,

குரலும், குழல் அதன் இசையும் - ஒன்றாய், 
ஒன்றியத்தில் எழுந்த குழப்பமடி,
குழம்பியவன் நான் இன்னும் 
தவறி விழுந்தப்படி.

#எழுத்தோலை!


Follow us @ www.facebook.com/ezutholai

No comments: