ஜூலை` 12
ஐவகை திணைகளுள், ஐம்பூதங்கள் வேண்டி
அன்றிலிருந்து, இன்றுவரை உறங்கவும் இல்லை
ஆறு மேல் இலைப்போல் எங்கு நான் போவேனோ
சேருமிடம் பெருங்கடலாம் உன்னில் அடங்கவோ,
கவிதைகள் எழுதிட மறந்துப் போனேன்
கனிமொழி உந்தன் பனிமொழி கேளா,
சுடும்பனி யாரும் கண்டிலார் தானோ - நானும்
தினம், தினம் அதனுள் வேகிறேன் ஏனோ
திருமொழி பெறும் வழி தெரியாமல் தானே
திரு, திருவென விழிக்கிறேன் மேலும்,
திருமொழி பெறும் வழி தெரியாமல் தானே
திரு, திருவென விழிக்கிறேன் மேலும்,
சொல்லடி, சொல்லின் சொல்லாயினி என்னுள்
நீயும் இறங்கி தொண்ணூறு நாளானதடி.
எழுத்தோலை!
follow us @ www.facebook.com/ezutholai

No comments:
Post a Comment