Friday, September 13

முடிவு, உன்னிடம் மட்டுமே..


ஜூலை` 14

கனவை திரித்து 
கயிறொன்று செய்து 
கட்டிட முனைகிறேன் - என் 
கண்களை கொலைச்செய்யும் - உன் 
கருவிழி வலயத்தை,

கயிறும் அறுந்ததே, 
உன்னிமை மயிர் ஒன்றை 
கடக்கும் தருணத்தில்,
என்னுயிரும் பிரிந்ததே,
உன் கண்ணின்மை வீரவாள்
என்னிதயத்தை கிழித்திட்ட
நொடிகளில்,

அழகு மொத்தமும்
உன்னுருவில் நின்றால்,
நானும் இருப்பேனோ - இல்லை
இறப்பேனோ?
இருந்தால் உனக்கும் - இலையேல்
இம்மண்ணுக்கும்,
உரமாய் ஆகவா - உன்
உறுதுணையாய் மாறவா,

முடிவு,
உன்னிடம் மட்டுமே.


எழுத்தோலை !



No comments: