Friday, September 13

மரித்து மண்ணில் மக்கிடும் வரையில் ...


ஆகஸ்ட்` 14

இருக்காராம் பிடித்து அசைக்கும் மூவர்ண 
கொடியில் இல்லாமல் போனது 
தமிழனின் அடையாளமும் அவன் உணர்வுகளில் 
உரமாய் கலந்திட்ட தமிழீழமும்,

உரக்க சொல்லி, உயர்த்திப் பிடித்தும் 
தலைக்கவிழ்ந்தே பறந்திட முனையும் 
தேசியக் கொடியும் வெட்கி தான் போனதோ, 
வேதனையில் துவழுதோ, 

இன்னும், இன்றும் கிடைத்துவிட்டதாய்
மார்தட்டி திரியும் இந்தியர் எல்லாம்
மரித்து மண்ணில் மக்கிடும் வரையில்
தமிழும், தமிழீழமும் என்றும் வாழ்ந்திடக்கூடுமோ,

தமிழனாய் இருந்திடு முதலில்,
இந்தியனாய் பின்பிருக்கலாம்,
தமிழனாய் இருந்திடு முதலில்,
இந்தியனாய் பின்பிருக்கலாம்,

வாழ்க தமிழ், வாழ்க தமிழ்
என்றே உரக்க சொல் ஓய்வின்றி,
தமிழுக்கும், தமிழீழத்திற்கும்
விடுதலைக் கிடைக்கும் வரை.

எழுத்தோலை!

No comments: