Friday, September 13

எங்கள் யாக்கைகளில் எல்லாம் குருதிக்கு பதிலாய்...


ஆகஸ்ட்` 15



காக்கைகளாய் நினைத்தனரோ செந்தமிழர்களை
இல்லை,
எங்கள் யாக்கைகளில் எல்லாம் குருதிக்கு
பதிலாய்,
தண்ணீர்தான் பாய்கிறதென்பது நினைப்போ,

இனியொரு விதி செய்திட சொன்னவனில்லை,
இனியும் விதிப்படி நடந்தால் புண்ணியமில்லை,
கொடியும், தோரணமும் கொண்டாடிட இல்லை 
பூங்கொடியுடன் நின்றிருந்தால் போராட்டமுமில்லை,

காக்கைகளாய் நினைத்தனரோ செந்தமிழர்களை
இல்லை,
எங்கள் யாக்கைகளில் எல்லாம் குருதிக்கு
பதிலாய்,
தண்ணீர்தான் பாய்கிறதென்பது நினைப்போ.

எழுத்தோலை !

No comments: