Friday, September 13

இதழ்களும் சிவக்குமோ....


ஜூன்` 22

வண்ண மயில்கள் மின்னும் கண்களில்
என்ன, என்ன எண்ணி இமைகளை சிமிட்டுமோ,
கொஞ்சும் பைங்கிளி பேசும் நொடிகளில் 
சொன்ன, சின்ன மொழிகளால் இதழ்களும் சிவக்குமோ,

என்னடி, பெண்ணடி சொல்லடி - உன் 
கண்ணடி, கண்ணாடி தானடி - கேளடி 
மயிலும், கிளியும் நீயடி - நீயின்றி 
நானடி, நாயடி, நரியடி - நாதியும் 
யாரடி, வேரடி, வெட்டி வீசி போடடி
போராடி, போனதடி என் உயிரும்
மண்ணடி, மடியடி மக்கிய குப்பையடி,
மறந்தும் மனையடி பக்கமும் சேராதடி,

வண்ண மயில்கள் மின்னும் கண்களில்
என்ன, என்ன எண்ணி இமைகளை சிமிட்டுமோ,
கொஞ்சும் பைங்கிளி பேசும் நொடிகளில்
சொன்ன, சின்ன மொழிகளால் இதழ்களும் சிவக்குமோ....

எழுத்தோலை!

No comments: