Friday, September 13

கண்களுக்குள் ஒரு உலகம் ...


ஜூலை` 22

நிறங்கள் தேடி அலைந்தாலும் 
நிறமேதும் தெரியாது உருளும்,
நிறங்கள் தேடி அலைந்தாலும் 
நிறமேதும் தெரியாது உருளும்,
இரவுகள் வந்தால் போதும், 
இருந்தும், உறங்கிப்போனால் மட்டும் 
உன்னைத் தழுவும்,
கண்களுக்குள் ஒரு உலகம் 
யாரும் அத்துமீறி நுழைந்திட 
முடியாதிருக்கும் அதுவும்,

தொடும் தூரம் வரை உன்னைத் துரத்தும்,
தெரியாதவரையும் தெரியச் செய்யும்,
கட்டிப் புரண்டு உருண்டு விழுந்து,
முத்தங்கள் கூட சத்தமாய் பெரும்
இன்பம் அதுவும் எல்லைக்கே செல்லும்,
கண்களுக்குள் ஒரு உலகம்
யாரும் அத்துமீறி நுழைந்திட
முடியாதிருக்கும் அதுவும்,

மகிழுந்தும், ஈருருளியும் புதியாய் நிற்கும்
அதை ஒட்டி மகிழும் சாத்தியம் அதனுள் முடியும்,
மாளிகையும், அதனுள் எல்லா வசதியும்
நாமும் கட்டி முடித்துவிட்டாய் காட்டும்,
வெளிநாட்டு சுற்றுலாக்கள் சுற்றிக் கலைத்து
வந்ததுப் போன்ற மாயையும் நடக்கும்,
கண்களுக்குள் ஒரு உலகம்
யாரும் அத்துமீறி நுழைந்திட
முடியாதிருக்கும் அதுவும்,

கனவென்று விழித்தபின் தான் அறிவோம்,
ஆனால், அதற்குள் அடையாதது எல்லாம்
அடைந்திருப்போம்,
கனவென்று விழித்தபின் தான் அறிவோம்,
ஆனால், அதற்குள் அடையாதது எல்லாம்
அடைந்திருப்போம்,,
கண்களுக்குள் ஒரு உலகம்
யாரும் அத்துமீறி நுழைந்திட
முடியாதிருக்கும் அதுவும்,

இரவும் தினம் வரும் போகும் - அதனுள்
உறக்கமும் வரும், வராமலும் இருக்கும்,
கனவென்பது அதுவல்ல,
ஆசைகளின் ஆணிவேரும்
ஆச்சிடாதொரு காகிதத்
தாளும் அதுவோ,
நீயாக நீ ஆக
காண் தினம் கனவும்
நிறைவேறும் அதும்
நிஜமாய் ஓர் நாளும்,
நீயாக நீ ஆக
காண் தினம் கனவும்
நிறைவேறும் அதும்
நிஜமாய் ஓர் நாளும்,
கண்களுக்குள் ஒரு உலகம்
யாரும் அத்துமீறி நுழைந்திட
முடியாதிருக்கும் அதுவும்.

"கனவில்" #எழுத்தோலை!

No comments: