Sunday, February 17

குறள்: 1213

ஐயன், திருவள்ளுவரின், திருக்குறளுக்கு எனது உரை, கவிதை நடையில், (புது முயற்சி)
பொருள்க்குற்றம் இருந்தால் மன்னிக்கவும், தெரிவிக்கவும்,
திருத்திக்கொள்கிறேன்.

"கனவுநிலையுரைத்தல், கற்பியல், காமத்துப்பால்"

குறள்: 1213

"நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்"

-----------------------------------------------------
எனது உரை (புதுக் கவிதை வடிவில்)
------------------------------------------------------

நனவிழந்து நிற்கிறேன்,
நிழலிருந்து பெருகிய
உயிர் போலே - ஒருக்காலும்
நிற்காமல் தொடரும்
வளியாய் அவன் முகம்,
ஆழ்ந்த உள்ளம் விடுத்து
கானா உலகிலாவது என்னிடம்
வருவதால் - அங்கேனும்
அன்பை பொழிவதால்.

எழுத்தோலை!



 

No comments: