Friday, February 15

தவிப்பு!

தூக்கம் தொலைத்த இரவுகள்
ஒன்றும் புதிதில்லை எனக்கு,

இன்றும் அப்படியே,
கூடுதலாய் ஒருக் கூட்டல்,
வகுக்கத் தெரியாமல்,
பெருக்க நினைத்ததில்
உண்டான சிக்கலில்,
கழித்துக் கொண்டிருக்கிறேன்,
இந்த இரவை,

தூக்கம் தொலைத்த இரவுகள்
ஒன்றும் புதிதில்லை எனக்கு.

எழுத்தோலை!


No comments: