Sunday, February 17

எனது பாக்கியம்!

சித்திரையில் நிலா ஒன்று,
நண்பகலில் எனக்கெதிரில்
வீதி உலா வந்திடவே,
நித்திரைலே மட்டும் வரும்
கனவோ,
என்பதுப்போல்,

ஊருணி மீனாய்,
கண்கள் உருட்டி
தொல்லாடி பழமையாய்,
குழியாடியாய் வளைந்தே,
குவியாடியாய் தொலைகிறேன்,
நிலைக்கண்ணாடி தேடி
நிஜமென்பதை
உணர்கிறேன்,

தேவர் உலகம்
இடம்பெயர்ந்து - நான் பிறந்த
இடத்தில் வந்ததுப்போல்,
ர, மே, ஊர் எனத்தொடங்கும்
மூவரும் ஒன்றாய், முழுதாய்
அவள்த்தானோ,

ரம்பையும்,
மேனகையும்,
ஊர்வசியையும்
யார்க்கண்டர் - நான்
கண்டேன் இன்றே,
அதுவே,

எனது பாக்கியம்.


எழுத்தோலை!


No comments: