Saturday, February 16

முகம் கண்டேன்!

பனிவிழும் இரவில்
பூக்களைப் பறித்து,
புல்வெளியோரம்
வழித்தடம் அமைத்தேன்,
வேல்விழியால்
வருகையையொட்டி
வேடந்தாங்கல்
பறவைகளை அழைத்தேன்,
கிளிகளும், குயில்களும்
கூடடைந்துப் போனதால்
மயில்களை தட்டியெழுப்பி
ஆடிட சொல்லிட நினைத்தேன்,

அடங்கிடா ஆசைகள் இன்னும்
எத்தனையோ இருக்கையிலே,
அவள் முகம் கண்டேன்
அத்தனையும் மறந்தேனே.

எழுத்தோலை!

No comments: