Saturday, February 16

வாழ்வை தொடங்கிடவே!

உன்னைப்போல் ஒருவன்தான் நானும்,
உறவுக்காய் ஏங்கி தவிக்கிறேன்,
நாதியற்று நிர்க்கதியில்
நாடோடியாய் அலைகிறேன்,
நலம் கேட்ககூட யாருமின்றி,
வளம் குன்றி இளைக்கிறேன்,

வா என்னுடன்,
வாழ்வோம் ஒன்றாய்,
எனக்கு நீ,
உனக்கு நான்,
போதும் அதுவே
வாழ்வை தொடங்கிடவே.

எழுத்தோலை!


 

No comments: