Monday, February 11

சில்மிஷம் 3



சிறியதாய் பொய் சொல்லி,
சிமிட்டிடும் கண்கள் இரண்டும்,
குவிந்திடும் எந்தன் மார்பில்,
அவள் இதழ் பதிந்து,
தொடங்கிடுவாள்,
இரவின் சேட்டைகளை,

பதினோரு மணி காட்சியாய்,
இடைவேளை வரை,
இருவர் நெஞ்சமும்,
மூர்ச்சை யாகும்,

சிக்கலாய் கிடக்கும்,
நூர்ப்பாலை நூல்கள் போலே
நாங்களும் கிடப்போம்,
சூரியக்கதிர் ஜன்னல்
புகுந்து எங்கள் எதிர்
வரும் வரை.

எழுத்தோலை!

No comments: