Friday, February 15

பூக்களின் அரசி!




தாமரை மொட்டுக்கள் எல்லாம்,
பட்டென்று பூத்தது,
சட்டென்று என்னவள்,
அதன் பொய்கையில் - தன்
பாதம் நனைத்து
போன நிமிடங்களில்,

வெட்கத்தில் குனிந்தன
வெள்ளை அல்லியும்,
வள்ளியாம், அவள் வடிவில்
மதி சொல்லிய நொடிகளில்,

பூக்களின் அரசி,
பூவரசி தானே,
பிறகெப்படி?

எழுத்தோலை!


No comments: