Saturday, February 9

என்ன தவம் செய்தேனோ?

Feb 2

விதைகள் விழுந்து
முளைக்கும் முன்னே ,
மழை நீரில் நனைந்து -
மிதந்து, நிலம் புலம்
பெயர்ந்து மண்ணாகிப்
போகுமோ,

அப்படியே,

விழுந்து பிழைக்க
தவித்த நானும்,
என்றோ இந்நேரம்
எங்கோ புதைந்து,
மண்ணோடு, மண்ணாய்,
மக்கியிருக்க கூடும்,

என்னுயிர் தமக்கை
என்றொருத்தி
எனக்கில்லாமல்
போயிருந்தால்,

இங்கிவளை யான் பெறவே,
என்ன தவம் செய்தேனோ?

எழுத்தோலை!



No comments: