Tuesday, February 12

என்று தணியும் இந்த பெண்மை மோகம்?


அரக்கர்கள் உள்ளவரை
அநீதிகள் செழிக்கும்,
அக்கறை உள்ளவரும்
அஞ்சி ஒதுங்கும்,
சமக்கால வாழ்வியலில்
வாழ்ந்தும் வற்றிய
ஆறே நாமும் - யாருக்கும்
பயனற்றுக் கிடக்கிறோம்,

அன்று டெல்லியிலும்,
இன்று காரைக்காலிலும்,
நடுவில் எத்தனையோப்
பேர் எங்கெங்கோ,
அரக்கர்கள் மட்டும்,
அரச மரியாதையுடன்
இன்று வரை இயல்பாய்
களிப்பரோ,

என்று தணியும் இந்த
பெண்மை மோகம்?
அன்றே பிறக்கும்
உண்மை சுதந்திரம்.


எழுத்தோலை!

No comments: