Monday, May 6

அதிசயம் நிகழ்ந்ததுப் போல் அதிர்ந்தேன்.....

Apr` 26

பல்லவி:

தனித்தீவில், தனிமையில் 
தவிக்கும் நிலவும் - தனக்கே,
துணையென உனை வர,
சொன்னாலும் சொல்லும், பத்திரம் (2)

சரணம்:

அதிசயம் நிகழ்ந்ததுப் போல்
அதிர்ந்தேன் ஓர் நாள்,
என்றுனைக் கண்டேனோ
அந்நாள்,
ஆகாயத்தாமரை அப்படியே
தரையிறங்கி, நடைப்பயின்றே
இதழ் சிரிக்க, எனக்கெதிரே
வந்ததால்,

பல்லவி:

தனித்தீவில், தனிமையில்
தவிக்கும் நிலவும் - தனக்கே
துணையென உனை வர
சொன்னாலும் சொல்லும் பத்திரம்,

சரணம்:

மழலை சிரிப்பில் உதிறும்
சிதறல்கள் எல்லாம் - உன்
இதழசைவில் நடந்திருக்க
வேண்டும்,
காணாமல் கண்டவன் போலே
கணக்கின்றி காண்கிறேன்
மணிக்கணக்காய் நாள், கிழமைப்
பார்க்கா,

பல்லவி:

தனித்தீவில், தனிமையில்
தவிக்கும் நிலவும் - தனக்கே
துணையென உனை வர
சொன்னாலும் சொல்லும் பத்திரம்,

சரணம்:

தவிக்காமல் தவிக்கும்
உன் மனசும் - துடிக்கின்ற
நொடிகள் எல்லாம் துயர்
துடைக்க துணையொன்று
இல்லாத போதும்,
விரும்பாமல் விரும்பி
தவித்ததுப் போதும்
தனிமையில்,
மேகங்கள் கூட்டாய் சேரா
மழையும் உண்டோ
வானில்,
பூங்காற்றும் வீசா
குளிர்காற்றும் சிலிர்க்குமோ
சொல்,

பல்லவி:

தனித்தீவில், தனிமையில்
தவிக்கும் நிலவும் - தனக்கே
துணையென உனை வர
சொன்னாலும் சொல்லும் பத்திரம் (2)


எழுத்தோலை!

No comments: