Monday, May 6

அகிலா, அகிலா...

Apr` 29


அகிலா, அகிலா
அதிகாலை பனித்துளியே உன் பெயரா,
அகிலா, அகிலா
அதிகாலை பனித்துளியே உன் பெயரா,

புள் நுனிகள் எல்லாம் திமிரில் திரியுது பெண்ணே
சொல்லிவை, நீ எந்தன் சொந்தம் என்றே,
பச்சைக்கிளிகள் கூட பார்த்துவிட துடிப்பேன்,
பச்சைப்பிள்ளைப் போல் எனை
மாற்றியவள் நீதானே,
தேடலில், தேடா கிடைத்த சொந்தம் - நீயும்
தென்றலும், மின்னலும், தெளிந்த வானும்
கலந்து செய்த சிற்பமோ, எனக்கும்,

அகிலா, அகிலா
அதிகாலை பனித்துளியே உன் பெயரா,
அகிலா, அகிலா
அதிகாலை பனித்துளியே உன் பெயரா,

தெருவெல்லாம் பெண்கள் கூட்டம் இருந்தும்
அங்கெல்லாம் உன் முகம் மட்டும் தெரியும்,
கண்களில் நீயும் விழுந்த நேரம் தானே
எனை நானே தெரிந்துக் கொண்டேன்
ராக்சசி என்னடி செய்தாய் என்னை
சாட்சிகள் இல்லா கொலைகளும் செய்கிறேன் நானும்,
காட்சிகள் காலையும், மாலையும்
காற்றைப் போல் மாறிடும் போதிலும்,
நிலவாக நீ மட்டும் தானே
ஒளிகின்றாய் அழகாய் தானே,

அகிலா, அகிலா
அதிகாலை பனித்துளியே உன் பெயரா,
அகிலா, அகிலா
அதிகாலை பனித்துளியே உன் பெயரா.


எழுத்தோலை!

No comments: