Monday, May 6

நம் புவியை, உலகை காக்க!

Apr` 22

உருகத் தொடங்கியது பனிமலைகள் 
இனி ஓடி ஒளிய முடியாது,
எரிக்க தொடங்கிவிட்டது சூரியன் 
இனி மழையை வேண்டியும் பயனில்லை,
ஆடியும் போனது ஐப்பசியும் வந்தது 
வராமலே நிர்ப்பது நீயோ மழையே,

எங்கு காணினும் கரும் புகை,
கார் மேகத்தையும் கரைக்கும் புகை,
கார்பன் மோனோ ஆக்சைட்
கட்டை வண்டி காலத்தில் இல்லையே,
கார் வண்டிகள் பெருகி போனதும்
காற்றும் கெட்டே சூழலும் கேட்டதோ?

சிந்திக்க தொங்கவிடின் - நம்
சந்ததிக்கு நிர்க்கதியே,
சிந்திப்போம், காப்போம்
புவியன்னையை - அவளின்மேல்
நாடகமாடும் நாம் எல்லாம்,
உலக புவி நாளாம் இன்றே,
உறுதிமொழி எடுப்போம்
நம் புவியை, உலகை காக்க.


எழுத்தோலை!

No comments: