Monday, May 6

புத்தம் புது மொழி!

Apr` 19

புத்தம் புது மொழி ஒன்றில் 
நித்தமும் எழுத நினைத்தேன் 
காதல் கவிதை புதிதாய்,
ஓசையில் பிறக்கும் 
ஒவ்வொரு மொழியும் 
ஓசையின்றி சிரித்தது, 
என்னையும் பார்த்தே ஏளனமாய்,
ஏன் இந்த விபரீதம் 
என்னையும் அறியாமலே 
கேட்கிறேன்,

ஏனடி இந்த வேதனை ?
போதும் என்றும்,
வேண்டும் என்றே
மீண்டும் மீண்டும்
கொல்லும் பார்வை
அதுவும் எதுவோ, ஏனோ
என்னிடம் கேட்காமலே
கேளிக்கை வேடிக்கை காட்டும்
கோமாளியாய் மாற்றியே
மாய்ந்து மாய்ந்து
ஓய்ந்துப் போகா
ஒவ்வொரு நொடியும்
ஓசையின்றி
புதைக்கின்றதே.


எழுத்தோலை!

No comments: