Monday, May 6

நானும் மனிதனா?.

Apr` 21

எதிர் நீச்சலிடும் மீன்க்குஞ்சியாய் 
முந்திட முனைகிறேன்,
காலம் என்னை எஞ்சிய 
மீன் முள்ளாய் உறிஞ்சியே 
துப்பியதே - கிடக்கிறேன் 
குப்பைகள் சூழ்ந்திட்ட தொட்டியில் 
கூட்டத்தில் நக்கிடும் 
நாயதன் நாவினில் - ஒட்டியும் 
ஒட்டாமலும், 
இரத்த கசிவை சிந்தியும்
சிந்தாமலும்,
துடைத்திட ஒழுகும்
அதுவும் என்னையும் பார்த்தே
ஏதேதோ கேட்கிறதே,


எழுத்தோலை!

No comments: