Monday, May 6

விசைப்படகாய்!

Mar` 27

மின்னலாய் நீ வந்துப் போனதும்
தென்றலும் என்னை தழுவிக்கொண்டதே
அன்னமே என்மேல் இன்னும் கோவமா,
ஜென்னலடைத்துப் போவதுதான்
உந்தன் ஞாயமா?
கண்கள் இரண்டும் பூத்ததடி
உனைக் காணாமலே
வந்தவழி திரும்பி விட்டேன்
வேலையேதும் முடியாமலே,

நீயில்லாமல் நானும்
உமிப்போலவே ஆனேனே,
திசையறியாமல் நாளும்
விசைப்படகாய் ஆனேனே.


எழுத்தோலை!

No comments: