Monday, May 6

சிரிக்கவில்லை!

Apr` 05

முதன் முதலாய் 
முடியாத பின்னலாய்
சிக்கிய நெஞ்சம் 
சிரிக்கவில்லை இன்னும்,

கிறுக்கி கொண்டிருக்கிறேன் 
பொருக்கி, பொருக்கி 
செந்தமிழில் உள்ள எழுத்துக்களை 
நாளும்,
கவிதை எழுத தெரியாத
நானும்,
கண்கள் குருடாய்
ஆனவன்ப் போல் தேடித் தேடியே,

முதன் முதலாய்
முடியாத பின்னலாய்
சிக்கிய நெஞ்சம்
சிரிக்கவில்லை இன்னும்,

தெரியவில்லை பெண்ணே,
அனுதினம் தேடியும்,
அரைமனதுடன் உண்டும்,
உறங்கியும்,
உளரும் எனது இருதயம்
சொல்லும்,
ஒருவரியும் கூட உன்ப் பெயராய்
இருப்பதைத் தவிர, எதையும்,

முதன் முதலாய்
முடியாத பின்னலாய்
சிக்கிய நெஞ்சம்
சிரிக்கவில்லை இன்னும்.


எழுத்தோலை!

No comments: